மாணவர்களிடம் அவர் ஒரு முறை தேர்வு எழுதப் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து சொல்லும்பொழுது - விடைத் தாளில் பிள்ளையார் சுழி போடாமல் - மாணவர்கள் கீழ்க் கண்ட வரிகளில் ஏதேனும் இரண்டு வரிகளை எழுதி, பிறகு தமிழ்த தேர்வு எழுதினால் - விடைத்தாள் திருத்துபவரைக் கவரலாம் என்று கூறினார்.
அவற்றில் சில இதோ:
தேனொழுகும் தீந்தமிழே - நீ கனி, நான் கிளி
வேறென்ன வேண்டும் இனி!
இறக்கின்ற நிலையினிலும் - இன்பத தமிழே உன்னை
மறக்காது நான் ஓத வேண்டும்.
இதுமாதிரி - அவர் பத்து இருவரிக் கவிதைகள் எழுதிப் போட்டார் - கரும்பலகையில். மாணவச் செல்வங்கள் - அதை எல்லாவற்றையும் தங்கள் நோட்டில் பக்தி சிரத்தையுடன் எழுதிக் கொண்டனர்.
அந்த ஆண்டு - தமிழ்ப் புத்தகத்தில் பாடம் முடிவில் - கேள்விகள் இருக்காது -- கேள்விகளையும், அவற்றிற்கான பதில்களையும் மட்டும் மனப்பாடம் செய்து - அதை அப்படியே தேர்வில் எழுதி - மதிப்பெண் பெறுவது என்ற மனோபாவத்தில் வளர்ந்த பல மாணவர்கள் அந்த காலக்கட்டத்தில் மிகவும் திணறிப் போய்விட்டார்கள். காலாண்டுத் தேர்வில் - அந்தத் தமிழ் ஆசிரியர் - கேள்விகளை -- மிகவும் கடினத் தமிழில் -- உதாரணமாக " பொய்யா விளக்கு பற்றி ஆசிரியர் புகலுவதைப் புகலுக ", "வரைந்தவைகளை வரைக", "அறைந்தவைகளை அறைக ", "விளக்குபவைகளை விளக்குக " என்றெல்லாம் அமைத்து - தன புலமையைக் காட்டியிருந்தார்.
அந்தக் காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் எழுதியிருந்த விடைத் தாள்களை -- திருத்தி, மதிபெண்களுடன் திருப்பிக் கொடுக்கும் நாளில் - அந்த ஆசிரியர் எவ்வளவு திண்டாடிப் போயிருப்பார் என்று தெரிந்தது.
பல மாணவர்கள் அவர் எழுதிப் போட்ட - எல்லா இரு வரிகளையும் பக்தியோடு எழுதி, வேறு விடைகள் எதுவும் எழுதாமல் விட்டிருந்தனர். விடைகளுக்கு பதிலாக - அந்த இரு (பது) வரிகள் போதும் என்று நினைத்திருந்தனர் போலிருக்கிறது.
ஒரு மாணவர் இரண்டே வரிகள்தான் எழுதியிருந்தார்.
" இறக்கின்ற நிலையில் இருக்கும் இன்பத் தமிழே!
நீ கிளி - வேறென்ன வேண்டும் இனி?"
ஹா! கடைசியில் எழுதியிருப்பது தான் அருமை.
பதிலளிநீக்குநாகப்பட்டினம் நெய்மிட்டாய்
பதிலளிநீக்குஎன்ற கடை மதுரையில் 1960ல் பார்த்திருக்கிறேன்.அது என்ன ஸ்பெஷல்?எங்கள் திருநெல்வேலி அல்வா மாதிரியா...