திங்கள், 31 ஆகஸ்ட், 2009
லோயர் பாரம் !
வியாழன், 20 ஆகஸ்ட், 2009
அந்த நாள் ஞாபகம் .. நெஞ்சிலே
ஒரு விஜயதசமி நன்னாளில் சாமினாத வாத்யார் என் கையைப் பிடித்து ஹரிஹிஓம் என்று மணலில் எழுத வைத்து 6 1/4அணா கொடுத்து சேர்ந்த பள்ளிக்கூடம் என் வீட்டிலிருந்து மூன்றாவது கட்டிடத்தில் இருந்தது. அதனால் முதல் நாள் பள்ளி செல்லும்போது அழவேண்டும் எனக்கூட தோன்றவில்லை . மனோரமா டீச்சர் என் க்ளாஸ் டீச்சர். டீச்சர் என்றால் பெண்பால். வாத்யார் ஆண்பால் ... அது அப்படித்தான் ! மனோரமா மேடம் மிக பொறுமையான அன்பான டீச்செர். இரண்டாவது வகுப்பில் லில்லி புஷ்பம் .கௌதமன் சொன்னாற்போல் சற்றே கடுமையாக பேசுவார், நடத்துவார். எப்பொழுதும் மொட மொட புடவை , சின்ன குடையை ஆட்டி ஆட்டி பஸ் ஸ்டாண்டு அருகாமையிலுள்ள வீட்டிலிருந்து மனோரமா ,லில்லிபுஷ்பம் இருவரும் சேர்ந்து வருவதும் போவதும் அழகாக இருக்கும். சந்தானம் என் வகுப்புதான். அவன் பாக்கெட்டில் ஸ்கூல் வரும்போது சர்க்கரையும் அரிசியும் அல்லது குழம்புத்தான் (கறிகாய்) கட்டாயம் இருக்கும்!!
மூன்றாவது வகுப்பு சிங்காரம் பிள்ளை வாத்யார் மிக நன்றாகப் பாடுவார். நாலாவதில் மாரிமுத்து வாத்யார்.நாடக வசனம் எழுதுவது,பேச,நடிக்கச சொல்லி கொடுப்பது அவர் ஸ்பெஷாலிடி.5வதில் கோவிந்தராஜ் ஸார்.மனக்கணக்கு டக் என்று பதில் சொல்லாவிட்டால் மூக்குபொடி போட்ட கையோடு மூக்கை திருகுவார்.அதற்கு பயந்தே அவர் கேள்விக்கு வேகமாக,சரியாக, உடனடியாக பதில் சொல்லி விடுவோம்.
நான் பள்ளியில் சேர்ந்தபோது நடேச ஐயர் ஹெட்மாஸ்டர். அவருக்கு அடுத்து சுப்ரமணிய ஐயர். காரணப் பெயராக செவிட்டு வாத்யார் என்று அழைக்கப்பட்டார்.அவர் முகத்தில் காது கேளாததால் வரும் சந்தேகமும் கோபமும் கல்ந்த பார்வை ( என்னை வச்சு காம்டி கீமடி ப்ன்னிடலியே ?! ) அதனால் அவர் க்ளாஸ் பக்கமே போகமாட்டோம். சில காலம் அவர் ஸ்கவுட் மாஸ்டராயிருந்தார். தேர்முட்டி ஸ்கூலில் இருந்து ராஜாராம் ஸார் வந்தார். அவர் ஸ்கவுட்ஸ் மாஸ்டரானார்.அவர் வந்த பின்தான மடிப்பு கலையாமல் உடுத்தினால் எவ்வளவு மிடுக்காக இருக்கும் என்பது புரிந்தது.அந்த காலகட்டத்தில் அவர் மாடர்னாக இருந்தது எங்களை பெரிதும் கவர்ந்தது.
அந்த பள்ளியில் 5வது வரைதான் வகுப்புகள். எனவே 6வதுக்கு வேறு பள்ளிக்குப் போக வேண்டும். நாகையில் இரண்டு ஹைஸ்கூல்தான். ஒன்று நேஷனல் ஹைஸ்கூல் மற்றொன்று CSI ஸ்கூல். அனேகமாக நேஷனல் ஸ்கூல் பள்ளிகளில் படித்தவர்கள் நேஷனல் ஹைஸ்கூலுக்குத்தான் செல்வர். என்னுடன் படித்த சந்தானம்,ராமன்,முத்துரத்தினம்,சிவராமன்,சிவசங்கரன்,தண்டபாணி, மணிவண்ணன், G.R.குமார், சந்துரு எல்லோரும் பெரிய பள்ளிக்கூடம் சென்றோம்..தேர்முட்டி ஸ்கூல்,மெத்தை பள்ளிக்கூடம்,வெளிப்பாளயம் ஸ்கூல் என இதர பள்ளி மாணவர்களும் எங்களுடன் சேர்ந்தனர். (தொடரும்)
with love and affection,
rangan
புதன், 12 ஆகஸ்ட், 2009
தத்துவம் என்ன சொல்லுவாய்?
சில விஷயங்கள் எவ்வளவுதான் படித்தாலும் பிடிபடுவதில்லை!
ஆந்த்ரொக்ஸ் நோய் ஒரு காலத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. மாடுகள் ஆயிரக்கணக்கில் அதன் தாக்கத்தால் பலியாவதாக பரவலாக பேசப்பட்டு, பின் அதைபற்றிய பேச்சையே காணோம். பின் இங்கிலாந்தில் ஃபுட்மௌத் டிஸீஸால் கால் நடைகள் பாதிக்கபட்டு அதன் இறைச்சியை உண்பவர்கள் அந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற செய்தி அந்த நாட்டு பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டது. இந்த வரிசையில்கோழிக்காய்ச்சல் நோய் வந்து அவ்வப்போது ஆயிரக்கணக்கான கோழிகள் கொலையுண்டு பெரிய பள்ளங்களில் நல்லடக்கம் செய்யப்பட்டன. டிங்கு ஜுரம்,சிக்கன் குனியா போன்ற நோய்களும் பரவி மக்களை நோயினாலும்,மருத்துவ செலவினாலும் வாட்டி வதைத்தது.
இந்த வரிசையில் இப்பொழுது H1N1 வந்திருக்கிறது.இந்த நோயின் தாக்கத்தில இருந்து காத்துக் கொள்வது எப்படி என்பதைவிட அதன் பாதிப்புகளைப் பற்றி மீடியாக்கள் விலாவாரியாக விவாதித்து தங்கள் வருவாயை அதிகரிப்பதிலும் மக்களை அச்சுறுத்துவதிலும் மிகுந்த கவனமாயிருப்பதாக நான் அபிப்ராயப்படுகிறேன். அரசும் தன் பங்கிற்க்கு இந்த நோயை,விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு, முறையற்ற அரசு செயல்பாடு இவைகளால் மக்களுக்கு உண்டாகும் அதிருப்தியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் கேடயமாகவோ அல்லது திசை திருப்பும் உத்தியாகவோ பயன்படுத்துகிற்து.
ஏதேனும் நோய் மேலை நாடுகளில் உண்டானால், அது நம்மிடம் பரவும் முன் இங்கு முன் எசசரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஒருசமயம் குஜராத்தில் சூரத்தில் ப்ளேக் நோய் பரவியபோது மேல் நாடுகள் இந்தியாவிலிருந்து மக்கள் வருவதைத் தடுத்தது. ஆனால் இப்பொழுது நோயின் தோற்றம் அமேரிக்காவில் என்று தெரிந்தும் அங்கு மக்களை அனுப்பவும் அல்லது அங்கிருந்து வருபவரைத் தடுக்கவோ எந்த செயல்பாட்டையும் திறம்பட செய்யவில்லை. ராஜபாட்டையாக மேல் நாடுகளின் குப்பை கழிவுகளுக்கும், நோய் பரவலுக்கும் இந்தியாவைப் புகலிடமாக வைத்துள்ளோம். நாம் எப்பொழுதுமே அடிமை மனப்பான்மையிலேயே இருக்கிறோம். கப்பல் கப்பலாக குப்பைக் கழிவுகளை, நோய் கழிவுகளை இறக்குமதி செய்கிறோம். கண்ணை விற்று சித்திரம் வாங்குவதென்பது இதுதானோ?
நோயின் திறம், தோற்றம், பாதிப்பு, இவற்றில் நம் அணுகு முறை காலம் கால்மாக தற்காப்பு முறையில்தான் இருக்கிறது. மக்கள் சுகாதாரத்தின் நன்மையை உணராதவர்களாகவே இருக்கின்றனர். நோய் வந்தபின் அதை குணமாக்குவதற்கு ஆகும் செலவை விட அதை வருவதற்கு இடம் இல்லாமல் செய்வதற்கு.ஆகும் செலவும் முயற்சியும் குறைவாகவே இருக்கும் அல்லவா? கடைத்தெருக்கள், பஸ் நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன், பள்ளி, கல்லூரி என எந்த இடத்திலும் சேரும் குப்பை கழிவுகளை அகற்ற நாமோ, அரசோ முனைப்புடன் எப்பொழுதும் செயல்படுவதில்லை. கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் செய்கிறோம். அதையும் ஆர்வமின்றி செய்கிறோம். இதையும் மீறி நம் நாட்டின் ஜனத்தொகை வளருவது உலக அதிசயந்தான் !!!
அன்புடன்
ரங்கன்.