புதன், 30 செப்டம்பர், 2009

நாகை தமிழ்

நாகப்பட்டினம் - தமிழ் - இரண்டையும் ஒருங்கே நினைத்துப் பார்த்தால் - நாகையில் நான் பயின்ற தமிழ் குறித்துத்தான் - எண்ணத் தோன்றுகிறது. எட்டாம் வகுப்புக்குப்பின் - ஆங்கில மொழிக் கல்விக்கு தடம் மாறிவிட்டதால், அதுவரை தமிழை ஒரு பாடமாக - நினைத்து தேர்ச்சி பெற வேண்டிய அளவுக்கு, மதிப்பெண் எடுக்க , என்று படித்த காலம் போய், தமிழை, தமிழுக்காக படித்த காலம் ஆரம்பமானது. இலக்கணம் கிடையாது, கட்டுரை,  துணைப் பாடம் இத்யாதிகள் கிடையாது. அந்தக் காலத்தில் எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க சு பன்னீர்செல்வம் என்று ஓர் ஆசிரியர் வந்தார். ஆசிரியப் பணி அரை மணி - அரட்டை மற்றும் அக்கப்போர் - அரை மணி என்று வகுப்பு நடத்துவார். (பொன்னியின் செல்வன் படித்துவிட்டு - நாகப்பட்டினம் புவியியல் குறித்து அவர் அவிழ்த்துவிட்ட அரை டஜன் 'டுப்'புகள் இப்பொழுதும் எனக்கு கனவில் வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் - எவ்வளவு பலமான தாக்கம் என்று!)  அப்பொழுது பதவியைப் பிடித்த ஒரு மூன்றெழுத்துக் கட்சி மீதும், அதற்கு பெரும் பங்கு காரணமாயிருந்த ஒரு மூன்றெழுத்து நடிகர் மீதும் அவருக்கு நிறைய பக்தி. ஒரு கிறித்துவப் பாதிரியாரின் மகனாக இருந்ததால், வாய்ப்பு வாய்க்கும்போதெல்லாம் இந்துக் கடவுள்களை ஜாடை மாடையாக கிண்டல் செய்வார். ஆனால் எல்லை மீறியதில்லை.
மாணவர்களிடம் அவர் ஒரு முறை தேர்வு எழுதப்  பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து  சொல்லும்பொழுது - விடைத் தாளில் பிள்ளையார் சுழி போடாமல் - மாணவர்கள் கீழ்க் கண்ட வரிகளில் ஏதேனும் இரண்டு வரிகளை எழுதி, பிறகு தமிழ்த தேர்வு எழுதினால் - விடைத்தாள் திருத்துபவரைக் கவரலாம் என்று கூறினார்.
அவற்றில் சில இதோ:
தேனொழுகும் தீந்தமிழே - நீ கனி, நான் கிளி 
வேறென்ன வேண்டும் இனி!
இறக்கின்ற நிலையினிலும் - இன்பத தமிழே உன்னை
மறக்காது நான் ஓத வேண்டும்.
இதுமாதிரி - அவர் பத்து இருவரிக் கவிதைகள் எழுதிப் போட்டார் - கரும்பலகையில். மாணவச் செல்வங்கள் - அதை எல்லாவற்றையும் தங்கள் நோட்டில் பக்தி சிரத்தையுடன் எழுதிக் கொண்டனர். 
அந்த ஆண்டு - தமிழ்ப் புத்தகத்தில் பாடம் முடிவில்  - கேள்விகள் இருக்காது -- கேள்விகளையும், அவற்றிற்கான பதில்களையும் மட்டும் மனப்பாடம் செய்து - அதை அப்படியே தேர்வில் எழுதி - மதிப்பெண் பெறுவது என்ற மனோபாவத்தில் வளர்ந்த பல மாணவர்கள் அந்த காலக்கட்டத்தில் மிகவும் திணறிப் போய்விட்டார்கள். காலாண்டுத் தேர்வில் - அந்தத் தமிழ் ஆசிரியர் - கேள்விகளை -- மிகவும் கடினத் தமிழில் -- உதாரணமாக " பொய்யா விளக்கு பற்றி ஆசிரியர் புகலுவதைப் புகலுக ", "வரைந்தவைகளை வரைக", "அறைந்தவைகளை அறைக ", "விளக்குபவைகளை விளக்குக " என்றெல்லாம் அமைத்து - தன புலமையைக் காட்டியிருந்தார்.
அந்தக் காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் எழுதியிருந்த விடைத் தாள்களை -- திருத்தி, மதிபெண்களுடன்  திருப்பிக் கொடுக்கும் நாளில் - அந்த ஆசிரியர் எவ்வளவு திண்டாடிப் போயிருப்பார் என்று தெரிந்தது.
பல மாணவர்கள் அவர் எழுதிப் போட்ட - எல்லா இரு வரிகளையும் பக்தியோடு எழுதி, வேறு விடைகள் எதுவும் எழுதாமல் விட்டிருந்தனர். விடைகளுக்கு பதிலாக - அந்த இரு (பது) வரிகள் போதும் என்று நினைத்திருந்தனர் போலிருக்கிறது.
ஒரு மாணவர் இரண்டே வரிகள்தான் எழுதியிருந்தார்.
" இறக்கின்ற நிலையில் இருக்கும் இன்பத் தமிழே!
நீ கிளி - வேறென்ன வேண்டும் இனி?"

சனி, 26 செப்டம்பர், 2009

வாக் தி டாக்!

கடந்த எட்டு வருடங்களாக காலையில் நானும்,  நண்பர் ஷ்யாமும் சுமார் ஒரு மணி நேரம் நடப்போம்ஷ்யாம் வீடடில் காபி குடித்துவிட்டு நடக்கத் தொடங்குவோம்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அமையும்சற்று சீக்கிரம் செல்வோம் என நினைத்தால் எல்லார் வீட்டிலும் பெருக்குகிறோம் என்ற பெயரில் தூசியை பறக்கவிட்டு எங்கள் தும்மலை பெருக்குவர்ட்ராஃபிக் அதிகம் இருக்காது என்ற கணிப்பில் வண்டிகள் வெகு வேகமாகக் கண்டபடி செல்லும்சென்ற வாரம் அந்தக் காலை வேளையில், ஒரு பெண், அப்பாவுடன் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறேன் என்று ஒரு திருப்பத்தில் தேமே என்று வந்து கொண்டிருந்த பேப்பர் போடும் பையனின் சைக்கிளில் மோதிவிட்டாள்நாங்கள் அந்த பையனின் பக்கத்தில் வந்து கொண்டிருந்தோம்சற்று தப்பியிருந்தால் எங்கள் மேலும் இடித்திருப்பாள்இதில் கொடுமை என்னவென்றால் கார்க்காரர் டேமேஜ் ஆன சைக்கிளுக்கு 50 ரூபாய் கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார்அடிபட்ட பையன் சிதறிய பேப்பர்களை சேகரிப்பதில் முனைப்பாகிவிட்டான்பாவம் அப்பாவிப் பையன்!. சாலையில்நடப்பவர்களுக்கு உள்ள அசௌகர்யங்களில் இதுவும் ஒன்றுநாம் பாட்டுக்கு நடக்கிறோம் என்று இல்லாமல் நாலா பக்கமும் பார்க்கவேண்டும்காலையில் நிதானமாக எழுந்து சற்று லேட்டாக போனால் காலை வெய்யில் கூட சுட்டெரிக்கும்!

நாங்கள் நடப்பதற்கு தேர்ந்தெடுதத ஏரியா அசோக நகர் மே.மாம்பலம் பார்டர் சாலைகள்நாங்கள் நடக்க காரணம் உடல் எடை குறைப்பு/அதிகரிப்பு ஆகாமல் இருக்க. .ஷ்யாமும் நானும் மாட்ச் ஆனதற்கு நாங்கள் நீண்ட கால நாகை நண்பர்கள் என்ற காரணம் மட்டுமில்லைஷ்யாம் நிறைய பேசுவார்நான் நிறைய கேட்பேன் தவிர இருவருக்கும் டயபெடிஸ் உண்டு!! பேசாமல் வாக் செய்ய வேனண்டுமென்று சிலர் சொல்வார்கள்ஷ்யாம் நிறைய்ய செய்திகள் சொல்வார்டாபிக் இது அது என்று கிடையாதுதெரு கிசுகிசுஆஃபிஸ் கிசு கிசுபாலிடிக்ஸ் என்று எல்ல விஷயங்களையும் அலசுவோம். inspiration for walk is talk! மற்ற நேரங்களில் வெளியில் போனால் ஊர் சுற்றுகிறாயென்னும் வீட்டினர், காலையில் நடந்தால் ஒன்றும் சொல்வதில்லை

இப்போது நிறைய பேர் வாக் செய்கிறர்ர்கள். டாக்டர்கள் சர்வ ரோக நிவாரணியாக இதை பரிந்துரைப்பதாலும்அதிக செலவில்லா சமாச்சாரம் என்பதாலும்ஒருவிதமான தப்புதல்(escape) காரணி என்பதாலுமோ(?) வயதானவர்கள் பெரும்பாலும் துணைவியருடன் வருகிறார்கள்அவர்களைப் பர்ர்த்தால் நமக்கும் உத்வேகம் வரும்வழக்கமாக நடப்பவர்களைப் பார்க்கும்போது உடனே பேசமாட்டோம்சில காலம் சென்று முறுவலித்து பின் ஹெல்லோ சொல்லும் அளவிற்கு கடந்த பின் அளவளாவலாம் என்ற ஸ்டேஜ் வரும்போது அனேகமாக இருவரில் ஒருவர் வர இயலாமை ஏற்பட்டுவிடும்இரயில் ஸ்னேகிதம் போல்தான் இந்த வாக் ஸ்னேகமும்!

சாலையில் நடப்பவர்களைவிட பார்க்குகளில் உலாத்துபவர்கள் சற்றே வித்யாசப்படுவார்கள். எப்படி? இவ்வளவு சுற்றுதான் என்று கணக்கிட்டு நடப்பர்வண்டிகள் தொந்திரவு இல்லாததால் ஹெட்செடடுடன் நடை பழகுவர்நடக்கையில் மீண்டும் மீண்டும் ஒருவரை கடந்து செல்கையில் பார்க்க வேண்டியிருப்பதால் இவர்கள் இளமுறுவல்கூட காண்பிக்கமாட்டார்கள்.

சில பெரியவர்கள் சற்றே அசட்டு தைர்யத்துடன் வயதுக்கு பாந்தமில்லாத பயிற்சிகளை செய்வார்கள். சொன்னாலும் ஒப்பபுக்கொள்ளமாட்டார்கள்அவர்கள் வேகமாக தலையை சுழற்றும்போது எங்கே தலைசுற்றி மயக்கமாகப் போகிறார்களோ என்று பயம் வரும்

வயதான பெண்களும் காலையில் பார்க்குக்கு வருவார்கள். அவர்கள் சற்றே கூச்சத்துடன் சிறார்களுக்கான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவார்கள்இளமைக்காலத்திலோசிறு பிராயத்திலோ நேரமோசுதந்திரமோ இல்லாமல் இருந்திருப்பார்களோஅவர்கள் ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் அட்வைஸ்களைத் தொகுத்தால் பல டீவி மெகா சீரியல்களுக்கான கரு கிடைத்துவிடும்தொடர்ந்து வாக் போவதால் அங்கு வருபவர்களைப்பற்றி ஓரளவிற்கு அனுமானம் உண்டாகும்வெவ்வேறு பென்சுகளில் அமர்ந்து செல்லில் உரையாடியவர்கள் (பிறர் யாரும் அறியமாட்டார் என்ற நெருப்புக்கோழி நம்பிக்கைசில காலத்திற்குப் பின் கைகோர்த்து செல்வர்.. வாழ்த்துக்கள்! பார்க்கில் பிறிதோரிடத்தில் RSS ஷகா நடக்கும்சிறுவர்களை எப்படி கவ்ர்ந்து அவர்கள் இயக்கத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்பது புரியாத புதிர்.

சில வருடங்களுக்கு முன் ஸைக்கிளில் அருகம்புல் ஜூஸ் கொண்டு வந்த பெண்மணி, இன்று மாருதி வானில் பல வேறு பாத்திரங்களில் கலர் கலரான திரவங்களை கொண்டு வந்து வியாபாரம் செய்கிறார்அவர் எங்கு புல் வளர்க்கிறார்எப்போது புல் பறிக்கிறார்?? எப்போது அரைக்கிறார்?? நல்ல தண்ணீர்தானா?? என்றெல்லாம் கேள்விக் கணைகள் மனதில் தோன்றினாலும் மக்கள் அருகம்புல் ஜூஸ் குடித்தால் உடம்பிற்கு நல்லது என்று தீவிரமாக நம்புவதால் மேற்கொண்டு ஆய்வதில்லை!

தினமும் நடந்து பழகி விட்டால் பின் ஒரு நாள் வாக்கிங் போகாவிட்டால் கூட ஒரு வெறுமை தோன்றும்!

with love and affection,
rangan

புதன், 16 செப்டம்பர், 2009

நாகை திரை அரங்குகள்

நாகை திரை அரங்குகள்
           சென்னையில் தற்பொழுது நூற்றுக்கணக்கான  திரை அரங்குகள் இருக்கின்றனபெயர் போன 10 அல்லது 15 அரங்குகளைத் தவிர பெரும்பாலான அரங்குகளுக்கு நான் போனதில்லைஆனால் நாகப்பட்டினத்தில் சிறு வயதில் சினிமா பார்க்கவேண்டும் என்ற ஆசை  அதிகம்.  நாகையில் மூன்றே அரங்குகள்தான் இருந்தனஅதில் ஒரு அரங்கில் அதிக பட்சமாக 10 அல்லது 12 படங்கள்தான் ஒரு வருடத்தில் திரையேறும்பெரும்பாலான படங்கள் மிகப் பழையவைபுதுப் படம் என்பது பெரிய ஊர்களில் 100,150 நட்கள் ஓடிய பின்பு எங்கள் ஊருக்கு மெதுவாக வரும்.  புது(!) படங்கள் பெருவாரியாக தீபாவளிஅல்லது பொங்கல் சமயத்தில் ரிலீஸ் ஆகும்மூன்று தியேட்டர்களிலும் மாற்றி மாற்றி படம் பார்ப்போம்
          நாகையில் 1962 வரை இரண்டு தியேடர்தான் இருந்தது.  ஸ்டார் டாக்கீஸ் மற்றும் ,பேபி டாக்கீஸ்பின் சிவகவி சுப்ரமணிய அய்யர் கட்டிய ஜயலக்ஷ்மி தியேட்டர் வந்ததுபேபி டாக்கீஸ் 1962 வாக்கில் திரு  ADJ அவர்களால் வாங்கப்பட்டு, பாண்டியன் தியேட்டர் என்று நாமகரணம் செய்யப்பட்டதுஇதைத் தவிர நாகூர் ராஜாகீழ்வேளுர் டூரிங்க் டாக்கீஸ் போன்றவைகளும் எங்களூர் கணக்கில் சேர்த்துக் கொள்வோம்!
          புதுப் படம் வருவதை மாட்டு வண்டியில் பேண்டு சகிதம் வீதி வீதியாக வந்து பிட் நோட்டிஸ்களை தருவதன் மூலம் அறிவிப்பார்கள்வண்டியின் பின் பக்கம் அமர்ந்து கொண்டு டகர டகர என்று ஒலி எழுப்பும் முகம் நன்றாக ஞாபகம் இருக்கிறது கதை சுருக்கம் சிறு புத்தகமாக கிடைக்கும்பெரிய சைஸ் கலர் பேப்பரில் கவர்ச்சியாக அச்சிட்டும் பறக்க விடுவார்கள்பெரிய பெரிய் போஸ்டர்களை தட்டியிலும் சுவர்களிலும் ஒட்டுவார்கள்படம் ஆரம்பிக்க சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பாக பக்தி பாடல் ஒலி பரப்புடன் ஆரம்பித்து புதிய சினிமா பாட்டுடன் முடிப்பார்கள்.
         ரயில் எஞ்சின் டிரைவர் வேலைக்கு சற்று மதிப்பு குறைந்த, ஆனால் எங்களைக் கவர்ந்த வேலை தியேட்டர் மேனேஜர் வேலைதான்ஸ்டார் தியேட்டர் மேனேஜர் ராஜகோபாலைக் கண்டால் கொஞ்சம் பயம்தான்டிக்கட் வாங்க க்யூவில் நிற்பவர்களை மிரட்டியும்சமயத்தில் அடிக்கவும் செய்வார்அதைப்பார்த்து போலிஸ் ரேஞ்சுக்கு அவர்மேல் மரியாதை கலந்த பயம்.
         ஸ்டார் தியேட்டர் மிகப் பழையதுஒரே ப்ரொஜெக்டர்தான்அதனால் 6 இடைவேளை உண்டுசிறு வயதில் தரை டிக்கட்தான்ஒரே பீடி நாற்றத்துடன் படம் பார்க்கவேண்டும்குறுக்கும் நெடுக்குமாக் இஷ்டப்படி உட்காரலாம்முன்னால் இருப்பவர் மறைத்தால் கேட்க பயம்அதனால் இங்கும் அங்குமாக நகர்ந்து பார்க்க வேண்டும்! படம் ஆரம்பிக்குமுன் வார்-ரீல் எனப்படும் நியூஸ் கட்டாயம்அந்தக் குரலும் ம்யூஸிக்கும் நினைத்தாலே  மனதில் கரகரவென்று பிராண்டும்இன்டெர்வெல் விடும் போதெல்லாம் வெளியில் செல்வோம்திறந்தவெளி கக்கூஸ்தான்ஆனால் அப்போது இந்த அளவுக்கு வியாதிகள் பெருகவில்லை
         பாண்டியன் தியேட்டர் இரண்டு ப்ரொஜெக்டருடன் சற்றே நவீனமாக இருந்தது. 3 இடைவேளைகள்அந்த தியேட்டர்  முட்டை வடிவ போண்டா நண்பர்கள் மத்தியில் ப்ராபல்யம். வீட்டினருடன் பாண்டியன் தியேட்டர் போவதென்றால், குதிரை வண்டியில் செல்வோம்குறுக்கே ஒரு ரயில்வே கேட்டும் வரும்எபபவோ க்ராஸ் செய்யும் ட்ரயின் அல்லது கூட்ஸ் ஷண்டிங்காக்க வைத்து சினிமா பர்ர்க்கும் டென்ஷனை உயர்த்தும் .ஸ்கூலில் இருந்து கட் அடித்து செல்லும் போது CSI ஸ்கூல் குறுக்கு வழியில்ரயில் ட்ராக்குகளை தாண்டிரோலிங்க் மில் ஓரமாக ஓடி தாண்டி குதித்து செல்வோம்படத்தை மிஸ் பண்ணலாமா?
       பள்ளியில் வெள்ளிக்கிழமை மேட்னி ஷோவில் ஹிந்தி அல்லது ஆங்கில படம் மாடினீ ஷோவாக வரும். 10வது படிக்கும்போது மஹாலிங்கம் சார் க்ளாஸை கட்டடித்து விட்டுப் போவதில் மிகுந்த த்ரில்படம் அவ்வளவாக புரியாதுஆனாலும் பாட்டு நன்றாக இருந்தது/இல்லை/.ஃபைட்டிங் சுமார் என்ற ரீதியில் பொதுவாக கமண்ட் அடித்து வைப்போம்சோமு ஒரே ஒரு  படத்தை பார்த்துவிட்டு 4 விதமான கதைகள் தயார் பண்ணிவிடுவான்அந்த கால கட்டத்தில் சினிமாவும் தியேட்டர்களும் மிக முக்கியமான விஷயங்கள்.அதனுடன் ச்ம்பந்தப்பட்ட்டவர்களும் முக்கியஸ்தர்களாகக் கருதப்பட்டனர். .
With love and affection,
Rangan

திங்கள், 7 செப்டம்பர், 2009

தேசீய உயர் நிலைப் பள்ளி






ஒன்பதாவது வகுப்பு மெயின் பில்டிங்கில்எஸ்.பி (S. Balasubramaniam) என்கிற சிறந்த மனிதர் எங்கள் வகுப்புஆசிரியர்கம்பீரமான தோற்றம்கலகலப்பான பேச்சுடீக்கான உடைஇடத்துக்கேற்ற பாவனை. நாம்கற்றுக்கொள்ள வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் உள்ள மனிதர்நகைச்சுவை அதிகம்நன்றாகப் பேசுவார்.எந்த நிகழ்ச்சியிலும் அவருக்கு முன்னுரிமை உண்டு.
எல்லாருக்கும் கட்டு மேனிக்கு பட்ட பெயர் வைப்பார்அந்த பெயர் நிலைத்து உண்மை பெயர் மறந்துபோய்விடும்கதக்,,பழபழசொம்புஓசிபீசி போன்றவை உதாரணம்அவரிடம் படிததவர்களுக்கு, நாலு கால்மண்டபமும் கழுதையும் நன்றாக ஞாபகம் இருக்கும்அவர் வேலைக்கு வந்து சம்பாதிக்க வேண்டியதில்லைஎன்பதை (நிஜமா?அடிக்கடிசொல்வார்சில்லரையாக மாற்றி அக்கரைக் குளத்திற்குப் போய் ஒரு ரூபாயாககாசில் தெத்திக்கல் விடும் அளவிற்குபணம் இருப்பதாகச சொல்லி அசத்துவார்.(ஒரு ரூபாய் எங்களுக்கு மிகப்பெரிய விஷயம் -எட்டு வெங்காய தோசை தோப்பு துரை ஹோட்டலில் சாப்பிடலாம் அதில்தான் ஜென்மசாபல்யம் அடைவோம்). நேரு பிறந்த நாள் என்றால் அவர் மாதிரியே ஷெர்வானி அணிந்து காட்சி தருவார்.கதா காலட்ஷேபம் செய்யும்போது பஞ்ச கச்சம் சிப்லா க்ட்டையுடனும்சர்ரணர் தினம் என்றால் ஸ்கார்ஃபுடன் மார்புக்கு மேல் ஏறிய பாண்ட் சஹிதமாகவும் சபாக்கச்சேரிக்கு ஜிப்பா வேஷ்டியுமாகவும் அனேகமாக பொருத்தமாக வரும் அவரை சராசரி ஆசிரியராகக் கருதக்கூடாது என்று அவர் கருதியது நியாயமே புதிய எண்ணங்களுக்கும்முயற்சிகளுக்கும் வித்தியாசமாக ஆதரவு தருவார. சுற்றுலா செல்வதற்கு ஸ்பான்சர் ஏற்பாடு செய்வது என ஈடுபாடு கொள்வார்மிகச் சிறிய நெருங்கிய மாணவர்களிடம் அவர் சென்னைப் பயணம் பற்றி கூறுவார்நம்புவது நம்பாதது அவரவர் இஷ்டம்நமப முடியாததை நம்புவதில் ஒரு த்ரில் இருக்கும்தானே !
நம்ம ஸ்கூலில் உதவி தலமை ஆசிரியருக்கு மேல் ப்ரொமோஷன் இல்லை என்ற நிலையில் வெளிப்பாளையம் நள தமயந்தி ஸ்கூலுக்ககு தலமை ஆசிரியராகச் சென்றார். பெருமாள் கோவில் சன்னதியில் இருந்த அவ்ர் வீடடிலிருந்து குதிரை வண்டி கிடைக்காவிட்டால் மேல ரோட்டில் கம்பீரமாக நடப்பதை பார்த்து நான் வியந்ததுண்டுநாங்கள் நண்பர்கள் 'மீட்'டுக்கு நாகை செல்லலும்போது, அவரை போய்ப் பார்ப்போம். அக்கறையுடன் விஜாரிப்பார்நிறைந்த ஆயுள் வாழ்ந்து மறைந்தார்.
பெரிய பண்டிட் பெயருக்கு ஏற்ற உருவம்க்ணீர் குரல்அதிகமாக கோபம் வராதுஎப்பொதும் எதோ யோஜனையில் இருப்பார்சின்ன பண்டிட் (அமைதி பண்டிட்நேர் மாறுதல்.மூக்கு நுனியில் கோபம் தயாராக இருக்கும்அமைதி அமைதி என்று அமைதியை குலைப்பார்சோமசுந்தரம் ப்ண்டிட் சாந்த சொரூபிமிக இனிமையானவர்நல்ல குரல் வளம் உள்ளவர்மார்கண்ட செட்டி தெருவில் மணி வீடுக்கு எதிரில் இருந்தார்.அவருக்குக் குழந்தைகள் இல்லைஎன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்மணி அவர் வீட்டிலேயேதான் இருப்பான்பல வருடங்களுக்குப் பிறகு, வளர்ப்பு மகனுடன் சென்னையில் ஓரிரு முறை பார்த்தேன்.
    எஸ். எஸ் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர்நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டுகாளி உபாசகர்.சந்தானம் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருந்தார்ஹெட்மாஸ்டருக்கும் இவருக்கும் ஷஷ்டாஷ்டகம்.வகுப்பில் தாராளமாக அவரை திட்டுவார்.
     கே. துரைசாமிப் பிள்ளை என்கிற கேடிபிள்ளைஇவர் எங்களுக்கு வகுப்பு ஆசிரியர் அல்லஆனாலும் நானும் சந்தானமும் இவரிடம் ப்ரைவேட் என்று மருவப்பட்ட ட்யூஷனுக்கு சென்றோம்மாதம் ரூபாய் ஃபீஸ்எந்த மாதமும் முழுதாகக் கொடுத்ததில்லைஎங்கள் செலவுக்குக் கொஞ்சம் எடுத்துக்கொள்வோம். (செலவு என்ன செலவுநித்யானந்த பவன் நெய் தோசைககு யார் பணம் தருவாங்க ?).ஃபீஸ் கொடுக்கும்போது சீனுவாசன் ஸார் பற்றிப் பேசுவோம்அவ்ளவ்தான்.ஃபீஸை மறந்து, அவரை திட்டத் தொடங்குவார்அது போதுமே எங்களுக்குபாதி நேரம் இங்கர்சாலை (அவர் மகன்திட்டுவார்இல்லாவிட்டால் அவர் ஊர் கமுதியைப் பற்றிப் பிரலாபிப்பார்பிதகோரஸை மூட்டை கட்டி வைத்துவிட்டு உம் கொட்டிவிட்டு வீடு வந்து விடுவோம்.அருமையான நாட்கள்(தொடரும்)