புதன், 30 செப்டம்பர், 2009
நாகை தமிழ்
சனி, 26 செப்டம்பர், 2009
வாக் தி டாக்!
கடந்த எட்டு வருடங்களாக காலையில் நானும், நண்பர் ஷ்யாமும் சுமார் ஒரு மணி நேரம் நடப்போம். ஷ்யாம் வீடடில் காபி குடித்துவிட்டு நடக்கத் தொடங்குவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அமையும். சற்று சீக்கிரம் செல்வோம் என நினைத்தால் எல்லார் வீட்டிலும் பெருக்குகிறோம் என்ற பெயரில் தூசியை பறக்கவிட்டு எங்கள் தும்மலை பெருக்குவர். ட்ராஃபிக் அதிகம் இருக்காது என்ற கணிப்பில் வண்டிகள் வெகு வேகமாகக் கண்டபடி செல்லும். சென்ற வாரம் அந்தக் காலை வேளையில், ஒரு பெண், அப்பாவுடன் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறேன் என்று ஒரு திருப்பத்தில் தேமே என்று வந்து கொண்டிருந்த பேப்பர் போடும் பையனின் சைக்கிளில் மோதிவிட்டாள். நாங்கள் அந்த பையனின் பக்கத்தில் வந்து கொண்டிருந்தோம். சற்று தப்பியிருந்தால் எங்கள் மேலும் இடித்திருப்பாள்! இதில் கொடுமை என்னவென்றால் கார்க்காரர் டேமேஜ் ஆன சைக்கிளுக்கு 50 ரூபாய் கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார். அடிபட்ட பையன் சிதறிய பேப்பர்களை சேகரிப்பதில் முனைப்பாகிவிட்டான். பாவம் அப்பாவிப் பையன்!. சாலையில். நடப்பவர்களுக்கு உள்ள அசௌகர்யங்களில் இதுவும் ஒன்று. நாம் பாட்டுக்கு நடக்கிறோம் என்று இல்லாமல் நாலா பக்கமும் பார்க்கவேண்டும். காலையில் நிதானமாக எழுந்து சற்று லேட்டாக போனால் காலை வெய்யில் கூட சுட்டெரிக்கும்!
நாங்கள் நடப்பதற்கு தேர்ந்தெடுதத ஏரியா அசோக நகர் - மே.மாம்பலம் பார்டர் சாலைகள். நாங்கள் நடக்க காரணம் உடல் எடை குறைப்பு/அதிகரிப்பு ஆகாமல் இருக்க. .ஷ்யாமும் நானும் மாட்ச் ஆனதற்கு நாங்கள் நீண்ட கால நாகை நண்பர்கள் என்ற காரணம் மட்டுமில்லை. ஷ்யாம் நிறைய பேசுவார். நான் நிறைய கேட்பேன் . தவிர இருவருக்கும் டயபெடிஸ் உண்டு!! பேசாமல் வாக் செய்ய வேனண்டுமென்று சிலர் சொல்வார்கள். ஷ்யாம் நிறைய்ய செய்திகள் சொல்வார். டாபிக் இது அது என்று கிடையாது. தெரு கிசுகிசு, ஆஃபிஸ் கிசு கிசு, பாலிடிக்ஸ் என்று எல்ல விஷயங்களையும் அலசுவோம். inspiration for walk is talk! மற்ற நேரங்களில் வெளியில் போனால் ஊர் சுற்றுகிறாயென்னும் வீட்டினர், காலையில் நடந்தால் ஒன்றும் சொல்வதில்லை
இப்போது நிறைய பேர் வாக் செய்கிறர்ர்கள். டாக்டர்கள் சர்வ ரோக நிவாரணியாக இதை பரிந்துரைப்பதாலும், அதிக செலவில்லா சமாச்சாரம் என்பதாலும், ஒருவிதமான தப்புதல்(escape) காரணி என்பதாலுமோ(?) வயதானவர்கள் பெரும்பாலும் துணைவியருடன் வருகிறார்கள். அவர்களைப் பர்ர்த்தால் நமக்கும் உத்வேகம் வரும். வழக்கமாக நடப்பவர்களைப் பார்க்கும்போது உடனே பேசமாட்டோம். சில காலம் சென்று முறுவலித்து பின் ஹெல்லோ சொல்லும் அளவிற்கு கடந்த பின் அளவளாவலாம் என்ற ஸ்டேஜ் வரும்போது அனேகமாக இருவரில் ஒருவர் வர இயலாமை ஏற்பட்டுவிடும். இரயில் ஸ்னேகிதம் போல்தான் இந்த வாக் ஸ்னேகமும்!
சாலையில் நடப்பவர்களைவிட பார்க்குகளில் உலாத்துபவர்கள் சற்றே வித்யாசப்படுவார்கள். எப்படி? இவ்வளவு சுற்றுதான் என்று கணக்கிட்டு நடப்பர். வண்டிகள் தொந்திரவு இல்லாததால் ஹெட்செடடுடன் நடை பழகுவர். நடக்கையில் மீண்டும் மீண்டும் ஒருவரை கடந்து செல்கையில் பார்க்க வேண்டியிருப்பதால் இவர்கள் இளமுறுவல்கூட காண்பிக்கமாட்டார்கள்.
சில பெரியவர்கள் சற்றே அசட்டு தைர்யத்துடன் வயதுக்கு பாந்தமில்லாத பயிற்சிகளை செய்வார்கள். சொன்னாலும் ஒப்பபுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் வேகமாக தலையை சுழற்றும்போது எங்கே தலைசுற்றி மயக்கமாகப் போகிறார்களோ என்று பயம் வரும்
வயதான பெண்களும் காலையில் பார்க்குக்கு வருவார்கள். அவர்கள் சற்றே கூச்சத்துடன் சிறார்களுக்கான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவார்கள். இளமைக்காலத்திலோ, சிறு பிராயத்திலோ நேரமோ, சுதந்திரமோ இல்லாமல் இருந்திருப்பார்களோ? அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் அட்வைஸ்களைத் தொகுத்தால் பல டீவி மெகா சீரியல்களுக்கான கரு கிடைத்துவிடும். தொடர்ந்து வாக் போவதால் அங்கு வருபவர்களைப்பற்றி ஓரளவிற்கு அனுமானம் உண்டாகும். வெவ்வேறு பென்சுகளில் அமர்ந்து செல்லில் உரையாடியவர்கள் (பிறர் யாரும் அறியமாட்டார் என்ற நெருப்புக்கோழி நம்பிக்கை) சில காலத்திற்குப் பின் கைகோர்த்து செல்வர்.. வாழ்த்துக்கள்! பார்க்கில் பிறிதோரிடத்தில் RSS ஷகா நடக்கும். சிறுவர்களை எப்படி கவ்ர்ந்து அவர்கள் இயக்கத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்பது புரியாத புதிர்.
சில வருடங்களுக்கு முன் ஸைக்கிளில் அருகம்புல் ஜூஸ் கொண்டு வந்த பெண்மணி, இன்று மாருதி வானில் பல வேறு பாத்திரங்களில் கலர் கலரான திரவங்களை கொண்டு வந்து வியாபாரம் செய்கிறார்! அவர் எங்கு புல் வளர்க்கிறார்? எப்போது புல் பறிக்கிறார்?? எப்போது அரைக்கிறார்?? நல்ல தண்ணீர்தானா?? என்றெல்லாம் கேள்விக் கணைகள் மனதில் தோன்றினாலும் மக்கள் அருகம்புல் ஜூஸ் குடித்தால் உடம்பிற்கு நல்லது என்று தீவிரமாக நம்புவதால் மேற்கொண்டு ஆய்வதில்லை!
தினமும் நடந்து பழகி விட்டால் பின் ஒரு நாள் வாக்கிங் போகாவிட்டால் கூட ஒரு வெறுமை தோன்றும்!
with love and affection,rangan
புதன், 16 செப்டம்பர், 2009
நாகை திரை அரங்குகள்
திங்கள், 7 செப்டம்பர், 2009
தேசீய உயர் நிலைப் பள்ளி
எல்லாருக்கும் சகட்டு மேனிக்கு பட்ட பெயர் வைப்பார். அந்த பெயர் நிலைத்து உண்மை பெயர் மறந்துபோய்விடும். கதக்,,பழபழ, சொம்பு. ஓசிபீசி போன்றவை உதாரணம், அவரிடம் படிததவர்களுக்கு, நாலு கால்மண்டபமும் - கழுதையும் நன்றாக ஞாபகம் இருக்கும். அவர் வேலைக்கு வந்து சம்பாதிக்க வேண்டியதில்லைஎன்பதை (நிஜமா?) அடிக்கடிசொல்வார். சில்லரையாக மாற்றி அக்கரைக் குளத்திற்குப் போய் ஒரு ரூபாயாககாசில் தெத்திக்கல் விடும் அளவிற்குபணம் இருப்பதாகச சொல்லி அசத்துவார்.(ஒரு ரூபாய் எங்களுக்கு மிகப்பெரிய விஷயம் -எட்டு வெங்காய தோசை தோப்பு துரை ஹோட்டலில் சாப்பிடலாம் - அதில்தான் ஜென்மசாபல்யம் அடைவோம்! ). நேரு பிறந்த நாள் என்றால் அவர் மாதிரியே ஷெர்வானி அணிந்து காட்சி தருவார்.கதா காலட்ஷேபம் செய்யும்போது பஞ்ச கச்சம் சிப்லா க்ட்டையுடனும், சர்ரணர் தினம் என்றால் ஸ்கார்ஃபுடன் மார்புக்கு மேல் ஏறிய பாண்ட் சஹிதமாகவும் சபாக்கச்சேரிக்கு ஜிப்பா வேஷ்டியுமாகவும் அனேகமாக பொருத்தமாக வரும் அவரை சராசரி ஆசிரியராகக் கருதக்கூடாது என்று அவர் கருதியது நியாயமே ! புதிய எண்ணங்களுக்கும், முயற்சிகளுக்கும் வித்தியாசமாக ஆதரவு தருவார. சுற்றுலா செல்வதற்கு ஸ்பான்சர் ஏற்பாடு செய்வது என ஈடுபாடு கொள்வார். மிகச் சிறிய நெருங்கிய மாணவர்களிடம் அவர் சென்னைப் பயணம் பற்றி கூறுவார். நம்புவது நம்பாதது அவரவர் இஷ்டம். நமப முடியாததை நம்புவதில் ஒரு த்ரில் இருக்கும்தானே !
நம்ம ஸ்கூலில் உதவி தலமை ஆசிரியருக்கு மேல் ப்ரொமோஷன் இல்லை என்ற நிலையில் வெளிப்பாளையம் நள தமயந்தி ஸ்கூலுக்ககு தலமை ஆசிரியராகச் சென்றார். பெருமாள் கோவில் சன்னதியில் இருந்த அவ்ர் வீடடிலிருந்து குதிரை வண்டி கிடைக்காவிட்டால் மேல ரோட்டில் கம்பீரமாக நடப்பதை பார்த்து நான் வியந்ததுண்டு. நாங்கள் நண்பர்கள் 'மீட்'டுக்கு நாகை செல்லலும்போது, அவரை போய்ப் பார்ப்போம். அக்கறையுடன் விஜாரிப்பார். நிறைந்த ஆயுள் வாழ்ந்து மறைந்தார்.
பெரிய பண்டிட் பெயருக்கு ஏற்ற உருவம். க்ணீர் குரல். அதிகமாக கோபம் வராது. எப்பொதும் எதோ யோஜனையில் இருப்பார். சின்ன பண்டிட் (அமைதி பண்டிட்) நேர் மாறுதல்.மூக்கு நுனியில் கோபம் தயாராக இருக்கும். அமைதி அமைதி என்று அமைதியை குலைப்பார். சோமசுந்தரம் ப்ண்டிட் சாந்த சொரூபி, மிக இனிமையானவர். நல்ல குரல் வளம் உள்ளவர். மார்கண்ட செட்டி தெருவில் மணி வீடுக்கு எதிரில் இருந்தார்.அவருக்குக் குழந்தைகள் இல்லை. என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். மணி அவர் வீட்டிலேயேதான் இருப்பான். பல வருடங்களுக்குப் பிறகு, வளர்ப்பு மகனுடன் சென்னையில் ஓரிரு முறை பார்த்தேன்.
எஸ். எஸ் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. காளி உபாசகர்.சந்தானம் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருந்தார். ஹெட்மாஸ்டருக்கும் இவருக்கும் ஷஷ்டாஷ்டகம்.வகுப்பில் தாராளமாக அவரை திட்டுவார்.
கே. துரைசாமிப் பிள்ளை என்கிற கேடிபிள்ளை. இவர் எங்களுக்கு வகுப்பு ஆசிரியர் அல்ல. ஆனாலும் நானும் சந்தானமும் இவரிடம் ப்ரைவேட் என்று மருவப்பட்ட ட்யூஷனுக்கு சென்றோம். மாதம் 6 ரூபாய் ஃபீஸ். எந்த மாதமும் முழுதாகக் கொடுத்ததில்லை. எங்கள் செலவுக்குக் கொஞ்சம் எடுத்துக்கொள்வோம். (செலவு என்ன செலவு! நித்யானந்த பவன் நெய் தோசைககு யார் பணம் தருவாங்க ?).ஃபீஸ் கொடுக்கும்போது சீனுவாசன் ஸார் பற்றிப் பேசுவோம். அவ்ளவ்தான்.ஃபீஸை மறந்து, அவரை திட்டத் தொடங்குவார். அது போதுமே எங்களுக்கு. பாதி நேரம் இங்கர்சாலை (அவர் மகன்) திட்டுவார். இல்லாவிட்டால் அவர் ஊர் கமுதியைப் பற்றிப் பிரலாபிப்பார். பிதகோரஸை மூட்டை கட்டி வைத்துவிட்டு உம் கொட்டிவிட்டு வீடு வந்து விடுவோம்.அருமையான நாட்கள்! (தொடரும்)