புதன், 12 ஆகஸ்ட், 2009

தத்துவம் என்ன சொல்லுவாய்?

சில விஷயங்கள் எவ்வளவுதான் படித்தாலும் பிடிபடுவதில்லை!
ஆந்த்ரொக்ஸ் நோய் ஒரு காலத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. மாடுகள் ஆயிரக்கணக்கில் அதன் தாக்கத்தால் பலியாவதாக பரவலாக பேசப்பட்டு, பின் அதைபற்றிய பேச்சையே காணோம். பின் இங்கிலாந்தில் ஃபுட்மௌத் டிஸீஸால் கால் நடைகள் பாதிக்கபட்டு அதன் இறைச்சியை உண்பவர்கள் அந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற செய்தி அந்த நாட்டு பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டது. இந்த வரிசையில்கோழிக்காய்ச்சல் நோய் வந்து அவ்வப்போது ஆயிரக்கணக்கான கோழிகள் கொலையுண்டு பெரிய பள்ளங்களில் நல்லடக்கம் செய்யப்பட்டன. டிங்கு ஜுரம்,சிக்கன் குனியா போன்ற நோய்களும் பரவி மக்களை நோயினாலும்,மருத்துவ செலவினாலும் வாட்டி வதைத்தது.
இந்த வரிசையில் இப்பொழுது H1N1 வந்திருக்கிறது.இந்த நோயின் தாக்கத்தில இருந்து காத்துக் கொள்வது எப்படி என்பதைவிட அதன் பாதிப்புகளைப் பற்றி மீடியாக்கள் விலாவாரியாக விவாதித்து தங்கள் வருவாயை அதிகரிப்பதிலும் மக்களை அச்சுறுத்துவதிலும் மிகுந்த கவனமாயிருப்பதாக நான் அபிப்ராயப்படுகிறேன். அரசும் தன் பங்கிற்க்கு இந்த நோயை,விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு, முறையற்ற அரசு செயல்பாடு இவைகளால் மக்களுக்கு உண்டாகும் அதிருப்தியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் கேடயமாகவோ அல்லது திசை திருப்பும் உத்தியாகவோ பயன்படுத்துகிற்து.
ஏதேனும் நோய் மேலை நாடுகளில் உண்டானால், அது நம்மிடம் பரவும் முன் இங்கு முன் எசசரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஒருசமயம் குஜராத்தில் சூரத்தில் ப்ளேக் நோய் பரவியபோது மேல் நாடுகள் இந்தியாவிலிருந்து மக்கள் வருவதைத் தடுத்தது. ஆனால் இப்பொழுது நோயின் தோற்றம் அமேரிக்காவில் என்று தெரிந்தும் அங்கு மக்களை அனுப்பவும் அல்லது அங்கிருந்து வருபவரைத் தடுக்கவோ எந்த செயல்பாட்டையும் திறம்பட செய்யவில்லை. ராஜபாட்டையாக மேல் நாடுகளின் குப்பை கழிவுகளுக்கும், நோய் பரவலுக்கும் இந்தியாவைப் புகலிடமாக வைத்துள்ளோம். நாம் எப்பொழுதுமே அடிமை மனப்பான்மையிலேயே இருக்கிறோம். கப்பல் கப்பலாக குப்பைக் கழிவுகளை, நோய் கழிவுகளை இறக்குமதி செய்கிறோம். கண்ணை விற்று சித்திரம் வாங்குவதென்பது இதுதானோ?
நோயின் திறம்
, தோற்றம், பாதிப்பு, இவற்றில் நம் அணுகு முறை காலம் கால்மாக தற்காப்பு முறையில்தான் இருக்கிறது. மக்கள் சுகாதாரத்தின் நன்மையை உணராதவர்களாகவே இருக்கின்றனர். நோய் வந்தபின் அதை குணமாக்குவதற்கு ஆகும் செலவை விட அதை வருவதற்கு இடம் இல்லாமல் செய்வதற்கு.ஆகும் செலவும் முயற்சியும் குறைவாகவே இருக்கும் அல்லவா? கடைத்தெருக்கள், பஸ் நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன், பள்ளி, கல்லூரி என எந்த இடத்திலும் சேரும் குப்பை கழிவுகளை அகற்ற நாமோ, அரசோ முனைப்புடன் எப்பொழுதும் செயல்படுவதில்லை. கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் செய்கிறோம். அதையும் ஆர்வமின்றி செய்கிறோம். இதையும் மீறி நம் நாட்டின் ஜனத்தொகை வளருவது உலக அதிசயந்தான் !!!
அன்புடன்
ரங்கன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக